Thursday, September 23, 2010

என் (ன) தேவை !


என் /நம் வாழ்க்கையில் என்ன இல்லை ?
அழகான வீடு ,உன்ன உணவு ,
உடுத்த நல்ல உடை,படுக்க இடம்
தூங்கினால் நல்ல நித்திரை ,
அதில் கலர் கலராய் கனவுகள் .
நல்ல அம்மா , அப்பா , அக்கா ,தங்கை ,
ஒவென குரல் கொடுத்தல் ஓடி வருவதற்கு ஒன்பது பேர்
சுற்றிலும அழகான பச்சை செடி , கொடி ,
அண்ணாந்து பார்கையில் அழகிய முழுநிலா, நீல வானம் ,
கிழே நாம் ஊன்றி கொண்டிருக்க பூமி,
சுவாசிக்க காற்று அதை உணர உணார்ச்சி,
நல்லதை காண கண்கள் ,
நல்லதை செய்ய இரு கைகள் ,
நல்லதை நோக்கி செல்ல இரு கால்கள் .
இவைகளை செயல்படுத்த உயர்,நாடி,துடிப்பு,இரத்தம் என்று
எல்லாமே தேவைக்கு மேல் தான் இருக்கிறது.
அத்துடன் ஆறாவது அறிவு வேற ,
இவை எல்லாம் இருக்கவே
எதுவுமே இல்லாதது போல மனம் ஏங்குவது ஏன் !
இவ்வளவு இருந்தும் ஏதும் இல்லாதது போல
நினைப்பது நடப்பது வெட்கம் தரகூடிய செயல் ஆகும் !
இருபது நிஜம், இல்லாதது வெறும் நிழல் ,
நிழலை பிடிக்க நிஜத்தை உணர மறுக்கிறது  மனது. !

என் முதல் கவிதை !


காலை உதிக்கும் சூரிய வெளிச்சம்

தவழும் குழந்தை பருவம்

மதிய உச்சி வெயில்

திசை தெரிய இளமை பருவம்

மாலை சாயங்கள மேகக்கூட்டம்

வளர்ந்து அறிந்த நடுத்தர பருவம்

நிலவு மட்டும் தெரியும் இருள் சூழ்ந்த இரவு

வெளிச்சத்தை தேடும் முதுமை பருவம் !