Tuesday, April 22, 2014

சுடு சோறு 


நேத்து வடிச்ச சுடு சோறு வீணா போகுமுன்னு
தண்ணி ஊத்தி வெச்சோம் அலுமினிய  சட்டியில 

நடு உச்சி வெயில்ல 8 km நடந்து வந்து உள் வயறு பசியில உள் இழுக்க 
ஒரு பருக்கை கிடைக்காத நு  தேடினோம் மரத்தடியில 

குழைஞ்ச சோறு எடுத்து தண்ணி வடிகட்டி உள்ளங்கை பட மசிச்சு
தக்காளி தோக்கோடு கேளறின  சாதம் கிழே விழாம ஒரு சேர பெசஞ்
உருண்டையா  உருட்டி கொடுத்தா  ஒரு மகராசி 

 நாக்கில் எச்சி  ஊற கண்ணுக்கு  விருந்தாக தெரிஞ்ச சோறு
கைக்கு எட்டுமோ வாய்க்கு ஏட்டுமோனு   சில பேரு  

அப்படியே கையில விழுந்த உருண்டை நாக்ல படமா உல் தொண்டையில முழுங்கி
வாழை இழை  விருந்துண்ட அனுபவம் கிடைச்சது போல
 பக்கதுல இருந்தவன பார்த்து  சிரிச்சோமே  நினைவிருக்கா


No comments:

Post a Comment